நவராத்திரி விழாவுக்காக கேரளா சென்ற சாமி விக்ரகங்கள் குமரி திரும்பின

Subscribe to Oneindia Tamil

களியாக்கவிளை: திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவுக்காக பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து பவனியாக சென்ற சுவாமி விக்ரகங்கள் 9 நாள் பூஜைக்கு பிறகு கன்னியாகுமரிக்குத் திரும்பின.

திருவனந்தபுரத்தில் கடந்த 8-ம் தேதி நவராத்திரி திருவிழா தொடங்கியது. இதில் வைப்பதற்காக பத்மநாபபுரம் தேவாரட்டு சரஸ்வதி தேவி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், வேளிமலை குமாரசாமி விக்ரகங்கள் கடந்த 5-ம் தேதி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

அங்கு சரஸ்வதி தேவியை திருவனந்தபுரம் கோட்டையிலும், நவராத்திரி மண்டபத்திலும், குமரசாமியை ஆரியசாலை கோயிலிலும், முன்னுத்தி நங்கையம்மன் விக்ரகத்தை செந்திட்டை பகவதியம்மன் கோயிலிலும் வைத்து 9 நாட்கள் பூஜைகள் நடத்தப்பட்டன.

கடந்த 14-ம் தேதி பூஜைகள் முடிந்த பிறகு இந்த விக்ரகங்கள் மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டன. நேற்று முன்தினம் நெய்யாற்றாரை கிருஷ்ணசாமி கோயிலில் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.

நேற்று காலை புறப்பட்ட பவனி, மாலை களியக்காவிளை வந்தடைந்தது. இன்று அவை பத்மநாபபுரம் அரண்மனையை அடைகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+