மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திடீர் நீரூற்று-பக்தர்கள் பரவசம்
Subscribe to Oneindia Tamil

உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் திடீரென ஒரு நீரூற்று உருவாகியுள்ளது. இந்தத் தகவல் பரவியதும் ஏராளமான மக்கள் கோவிலில் குவிந்து விட்டனர். இந்த நீரூற்றை அதிசயச் செயலாக கருதி அதை வணங்க ஆரம்பித்துள்ளனர்.
மதுரை மட்டுமல்லாமல் சுற்றுப்பகுதி மாவட்டங்களிலிருந்தும் பெருமளவில் பக்தர்கள் மதுரைக்குப் படையெடுத்து வர ஆரம்பித்துள்ளனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது.
ஏற்கனவே அயோத்தி தீர்ப்பு எதிரொலியாக மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது நீரூற்றைக் காண பெருமளவில் பக்தர்கள் குவிகவதால் பாதுகாப்புக்கு பங்கம் வந்து விடாமல் இருப்பதாக கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நீரூற்று எப்படி உருவானது என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications