மறைந்த சுனில் தத்துக்கு தேசிய நட்புறவு விருது

தேசிய ஒருமைப்பாட்டிற்கு அவர் ஆற்றிய பணியை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. மக்களிடையே தேசிய ஒருமைப்பாடு, நட்புணர்வு, ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் செயல்புரிபவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை நட்புறவு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான அறக்கட்டளை வழங்குகிறது.
டெல்லியில் வரும் ஜூலை 30-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் இந்த விருதை துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியிடமிருந்து சுனில் தத்தின் மகளும்,காங்கிரஸ் எம்.பியுமான பிரியா தத் பெற்றுக்கொள்கிறார்.
இந்த விருது பாராட்டுப் பத்திரமும், ரூ. 1 லட்சம் ரொக்கமும் அடங்கியதாகும். சுனில் தத், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய ஆட்சியில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே, எழுத்தாளர் குஷ்வந்த் சிங், மௌலானா வஹித்துதின் கான், நீதிபதி நானி ஏ. பல்கிவாலா உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.












Click it and Unblock the Notifications