மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நைடபெற்றது.
ஆகஸ்ட் 19ம் தேதி நடைபெற்ற இந்த முகாம், சென்னை நுங்கம்பாக்கம், ரமா தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த முகாமில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் குறைபாடுகளைப் பரிசோதித்து உரிய ஆலோசனைகளை வழங்கினர்.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாமில், மாணவர்களுக்கு மருத்துவ அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
மேலும், கண் பரிசோதனை முகாமும் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.
காது கேளாத குறைபாடு கொண்டிருந்த மாணவர்களுக்கு காது கேட்கும் கருவிகளும் அளிக்கப்பட்டன.
கிட்டத்தட்ட 262 மாணவர்கள் இதில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இவர்களில் 116 பேருக்கு கண்களில் பாதிப்பு இருந்ததும், 65 பேருக்கு காது கேட்காத தன்மை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 46 பேர் மன வளம் குறைந்தவர்கள். 35 பேர் உடல் ஊனம் கொண்டவர்கள் ஆவர்.
அறுவைச் சிகிச்சை தேவைப்படும் மாணவர்களுக்கு அதுகுறித்த ஆலோசனைகள் அவர்களின் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் ஆர்.அஸ்வினி, ரங்கப் பிரியா, வாணி நந்தகுமார், ரூபெல்லா, முருக ரேகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications