நாகர்கோவில் அருகே விநாயகர் சிலை மீது பாம்பு நடனம்: மக்கள் ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: நாகர்கோவில் ஒழுகினசேரி ஆறாட்டு சாலை அருகே உள்ள விநாயகர் சிலை மீது பாம்பு ஒன்று நடனம் ஆடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில் ஒழுகினசேரி ஆறாட்டு சாலையில் ஆற்றங்கரையையொட்டி மிகப்பெரிய அரச மரம் உள்ளது. இந்த அரச மரத்தின் அடியில் விநாயகர் சிலை ஒன்று உள்ளது.

ஆற்றுக்கு குளிக்க வரும் பொதுமக்கள் தினமும் அந்த மரத்தடியில் உள்ள விநாயகருக்கு தண்ணீர் ஊற்றுவதும், வழிபாடு நடத்துவதும் வழக்கம்.

இந்த நிலையில், வழக்கம் போல் ஆற்றில் குளித்து விட்டு விநாயகரை வழிபட வந்த சிலர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம், அந்த விநாயகர் சிலை மீது பாம்பு ஒன்று நடனம் ஆடியபடி இருந்ததாக கூறப்படுகின்றது. இதைக் கண்டு அவர்கள் சத்தம் போட அருகில் இருந்தவர்களும் வந்து இந்த காட்சியைப் பார்த்து வணங்கிச் சென்றுள்ளனர்.

விநாயகர் கழுத்தில் பாம்பு நடனம் ஆடிய தகவல் காட்டுத் தீயாக பரவ அக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்களும் அங்கு வந்து விநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தி செல்கின்றார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+