சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு யோகா பயிற்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு யோகா பயிற்சிகள் இன்று வழங்கப்பட்டன.
மாநகராட்சியில் பணிபுரியும் மொத்தம் 18 ஆயிரம் பேருக்கு இந்த பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் அனைவருக்கும் இலவசமாக மருத்துவ பரிசோதனைகளும் நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்காக ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி முதல்கட்டமாக சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று 6 துறைகளைச் சேர்ந்த 250 பணியாளர்களுக்கு யோகா மற்றும் மருத்துவ சோதனை நடந்தது.
மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தார். யோகா பயிற்சிகள் மனவளக்கலை மன்றம் மூலம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த எஞ்சிய பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் யோகா மற்றும் மருத்தவ பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications