குற்றாலத்தில் சிஎஸ்ஐ சினாட் பேரவை தேர்தல்

Subscribe to Oneindia Tamil

குற்றாலம்: குற்றாத்தில் நடந்த சிஎஸ்ஐ சினாட் பேரவை கூட்டத்தில் பெங்களூரு பிஷப் புதிய மாடரேட்டராகவும், கன்னியாகுமரி பிஷப் துணை மாடரேட்டராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

சிஎஸ்ஐ பிரதம பேராயர் (மாடரேட்டர்), துணை பிரதம பேராயர் (துணை மாடரேட்டர்), பொது செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோர் பதவி காலம் முடிவடைந்தது. இப்பதவிகளுக்கு புதிய நபர்களை தேர்வு செய்ய 32வது சினாட் பேரவை கூட்டம் குற்றாலத்தில் துவங்கியது.

தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, இலங்கை யாழ்பாணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 22 டயோசீசன்களின் பிஷப்புகள், சினாட் உறுப்பினர்களின் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மாடரேட்டர் கிளாட்சன் தலைமை வகித்தார். 600 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாடரேட்டராக தேர்ந்தெடுக்க விரும்பும் பி்ஷப்புகளின் பெயர்களை சினாட் உறுப்பினர்கள் எழுதி கொடுத்தனர்.

50 சதவீதத்திற்கும் அதிகமான ஆதரவு பெற்றவர்கள் மாடரேட்டராக அறிவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது.

இத் தேர்தலில், பெங்களூரு டயோசீசன் பிஷப் வசந்தகுமார் மாடரேட்டராகவும், கன்னியாகுமரி பிஷப் தேவகடாகட்சம் துணை மாடரேட்டராகவும், பொது செயலாளராக மத்திய கேரளாவை சேர்ந்த எம்.எம் பிலிப், பொருளாளராக தெற்கு கேரளா திருவனந்தபுரம் டயோசீசனை சேர்ந்த பெனட் ஆபிரகாம் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிதாக தேர்வு செய்யப்படட நிர்வாகிகளுக்கு இன்று மாலை 4.30 மணிக்கு குற்றாலத்தில் பாராட்டு விழா நடக்கிறது. அமைச்சர்கள் மைதீன்கான், எம்பி ராமசுப்பு, உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+