காணும் பொங்கல்- குற்றாலத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: காணும் பொங்கலையொட்டி குற்றாலத்தில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் பெருமளவில் குவிந்தனர்.
தை பொங்கல் மூன்றாவது நாள் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் தினத்தன்று மக்கள் அருகில் உள்ள சுற்றுலா தலத்துக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வது உண்டு.
இந்த ஆண்டு காணும் பொங்கல் தினமான நேற்று குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம், குண்டாறு நீர்தேக்கம், அடவி நயினார் அணைக்கட்டு, ஆரியங்காவு பாலருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
குற்றாலம் மெயின் அருவியில் காணும் பொங்கலை முன்னிட்டு வந்த சுற்றுலா பயணிகளுடன், சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அதிகமாக இருந்தது. அருவிகளில் ஓரளவு தண்ணீர் சுமாராக கொட்டியது.












Click it and Unblock the Notifications