இன்று காணும் பொங்கல்-சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

Kaanum Pongal
சென்னை: இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கடற்கரை, மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதால் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையின் நிறைவாக இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, பொழுதுபோக்கு இடங்கள், மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடற்கரையில் மட்டும் 5000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

இதுதவிர வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடலில் குதிப்பதற்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். குதிரைப்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தமிழகம் முழுவதும்..

இதேபோல திருச்சியில் முக்கொம்புப் பகுதியில் பெருமளவில் மக்கள் கூடியுள்ளனர். அதேபோல கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் இதர பகுதிகளிலும் கூட காணும் பொங்கல் சமீப காலமாக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+