கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா-அலகு குத்தி நேர்த்திக் கடன்!
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரில் அருள்மிகு மாரியம்மன் திருழாவில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கு கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செய்து வழிபட்டனர்.
ஜஹவர் பஜாரில் உள்ள இக் கோவிலில் கடந்த திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை காலை 3 மணி முதலே அமராவதி ஆற்றங்கரையில் பக்தர்கள் குளித்துவிட்டு, மஞ்சள் ஆடை அணிந்து அலகு குத்தி மாரியம்மன் கோவில் வரை வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
அதே போன்று அக்னி சட்டியை அமராவதி ஆற்றங்கரையில் இருந்து மாரியம்மன் கோவில் வரை எடுத்து வந்து பெண்கள் நேர்த்திக் கடனை நிறைவு செய்தனர்.
இந்த திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கரூரில் குவிந்தனர்.












Click it and Unblock the Notifications