15 அடி நீள ராஜநாகத்தை பிடித்து கழுத்தில் மாலையாக அணிந்த வாலிபர்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே 15 அடி நீளமுள்ள ராஜநாகத்தை உயிருடன் பிடித்து கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொண்டார் ஒரு வாலிபர்
திருவனந்தபுரம் அருகே உள்ள ஸ்ரீகாரியம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய வீட்டு முன்பு கட்டியிருந்த அவருடைய நாய் விடாமல் குறைத்தது. இதனால் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
காரணம் அங்கு 15 அடி நீளம் உள்ள ராஜநாகம் ஒன்று கிடந்தது. உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத்துறையினர் பாம்பைக் கண்டு அருகில் செல்ல பயந்து திகைத்து நின்றனர். அதன் பின்பு பாம்பை பிடிப்பதில் திறமைசாலியான சுரேஷ் என்ற வாலிபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த சுரேஷ் ராஜநாகத்தை பவ்யமாக பிடித்து மாலை போன்று கழுத்தில் போட்டுக் கொண்டார். திருவனந்தபுரம் அருகில் உள்ள கருங்காலி காட்டுக்குள் அந்த பாம்பு விடப்பட்டது.












Click it and Unblock the Notifications