நோவா பேழையின் மிச்சம் துருக்கி மலையில் கண்டுபிடிப்பு?

கிறிஸ்தவ ஆய்வாளர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் இந்தப் பேழையை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்தக் கூற்றை பலரும் நிராகரித்துள்ளனர்.
தான் உருவாக்கிய உலகில் அக்கிரமங்கள் பெருகியதைப் பார்த்த கடவுள், நோவாவை அழைத்து நீ ஒரு பேழையை உண்டாக்கு. அதனுள் நீயும், உனது குடும்பத்தாரும் போய் இருந்து கொள்ளுங்களள். இந்த உலகில் உள்ள விலங்குகள், பறவைகள், தாவர வகைகளில் சிறந்தவற்றை ஒவ்வொரு ஜோடியாக எடுத்து உன்னுடன் அந்த பேழைக்குள் வைத்துக்கொள். நான் உலகில் பிரளயத்தை ஏற்படுத்தப் போகிறேன். அதிலிருந்து நீயும் பிற உயிரினங்களும் தப்பிக் கொள்ளுங்கள் என்று கூறினார் என்று பைபிள் கூறுகிறது.
அன்று நோவா உருவாக்கிய பேழையின் ஒரு பகுதியைத்தான் தற்போது துருக்கி மலைப் பகுதியில் புதைந்த நிலையில் கண்டுபிடித்திருப்பதாக கூறியுள்ளனர் கிறிஸ்தவ ஆய்வாளர்கள்.
அராரத் பனிமலையின் அடிப் பகுதியில் இந்த பேழை புதைந்திருக்கிறதாம். ஆனால் இதை பலர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதுகுறித்து மத்திய கிழக்கு தொடர்பான ஆய்வுகளில் பிரபலமானவரான பால் ஜிம்ஸன்கி கூறுகையில், இப்படி ஒரு ஆய்வு நடந்தது குறித்து எனக்குத் தெரியாது. நோவாவின் பேழை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் எனக்குத் தகவல் இல்லை என்றார்.
இருப்பினும் துருக்கி மற்றும் சீனாவைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அடங்கிய குழுவினர் ஹாங்காங்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது 100 சதவீதம் நோவாவின் பேழை என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் 99.9 சதவீதம் இது பேழையாக இருக்கலாம் என உறுதியாக நம்புகிறோம் என்றனர்.
ஏற்கனவே ஈரானிலும் இதேபோல நோவாவின் பேழை காணப்பட்டதாக முன்பு ஒரு தகவல் வெளியானது நினைவிருக்கலாம்.
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேலில் நடந்த அகழ்வாராய்ச்சியில், 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த குடியிருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அங்குதான் இயேசுநாதர் வாழ்ந்தார். அது இயேசுநாதரின் வீடாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோவாவின் பேழை கடவுள் உருவாக்கிய பெரும் வெள்ளத்தில் நீந்தி கடைசியில் அராரத் மலையில் வந்து நின்றதாக பைபிளின் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது. இதனால்தான் அராரத் மலை, அனைத்து கிறிஸ்தவர்களின் ஆர்வத்தையும் நீண்ட காலமாக ஈர்த்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications