நவ. 14-ல் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, மாறுவேடப்போட்டி: மைலாப்பூர் பள்ளியில் நடக்கிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சமூக சேவகி சரோஜினி வரதப்பனை தலைவராகக் கொண்டு மைலாப்பூர் அகடமி செயல்பட்டு வருகிறது. அந்த அகடமியின் கவுரவ செயலாளர் வீரராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நேரு பிறந்தநாள், குழந்தைகள் தினம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கொண்டாடும் விதத்தில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, மாறுவேடப் போட்டி ஆகியவை நவம்பர் 14-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
மைலாப்பூரில் உள்ள பி.எஸ்.மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் இந்தப் போட்டிகள் 14-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இதில் வயது வரம்பு இன்றி அனைத்து வயது மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.
இது குறித்த விவரங்களுக்கு ராஜா அண்ணாமலைபுரம் சிருங்கேரி மடம் ரோட்டில் உள்ள மைலாப்பூர் அகடமியின் கவுரவ செயலாளர்களை அணுகலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications