நெல்லையில் மருத்துவமனையில் ராணுவ சிகிச்சை பிரிவு துவக்கம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: பாளை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை வீரர்கள் சிகிச்சை பெறும் வகையில் ராணுவ மருத்துவமனை சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது.

நான்குநேரி விஜயநாராயணத்தில் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தளம் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்கள் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்.

சாதாரண நோயாளிக்களுக்கான பிரிவிலேயே இவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இந்நிலையில் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தளத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிகிச்சை பெறுவதற்காக ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் ராணுவ சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஹைகிரவுண்ட் மருத்துமனை தலைமை அதிகாரி கனகராஜ், ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தலைமை அதிகாரி கமோடர் சுபாஷ் கத்வி திறந்து வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+