மே 27 - கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி !
கூடலூர்: கோடை விழாவின் ஒரு பகுதியாக கூடலூரில் முதல் முறையாக வரும் 27ம் தேதி வாசனை திரவியங்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நடந்து வருகிறது. ஊட்டியில் ரோஸ் மற்றும் மலர்க் கண்காட்சி நடைபெற்றது. தற்போது குன்னூரில் பழக் கண்காட்சி நடந்து வருகிறது. கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி நடக்க உள்ளது.
இந் நிலையில் கோடை விழாவின் ஒரு பகுதியாக முதல் முறையாக கூடலூர் செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் வாசனை திரவியங்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்காக கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
கண்காட்சியை முன்னிட்டு வரும் 27ம் தேதி காலை நகராட்சி அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து வாலிபால் போட்டி, ஆதி வாசி மக்களின் கலாச்சார நிகழ்ச்சி, பட்டிமன்றம், மேஜிக் ஷோ மற்றும் நாட்டிய, இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
மறுநாள் மாலை பரிசளிப்பு விழாவும், ஆதிவாசிகள் பாரம்பரிய குரும்பா நடனமும் நடைபெறும்.
தோட்டக்கலை, வனத் துறை, இந்திய வாசனை திரவிய நிறுவனம், ஆவின், நெஸ்லே, சுற்றுலா துறை சார்பில் இதற்காக 20 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications