லண்டன முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா!
Subscribe to Oneindia Tamil
லண்டன் ஸ்ரீமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 30ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
லண்டன் சர்ச் ரோடு பகுதியில் அமைந்துள்ள முருகன் கோயிலுக்கு அதன் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள் திரண்டு வந்து விழாவில் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் நடப்பது போலவே பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என்று வித விதமான காவடிகளை சுமந்து முருக பெருமானின் திருவடியில் சமர்ப்பித்து பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.
பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உள்பட பலதரப்பட்ட வயதினரும் பால் குடம் சுமந்து ஊர்வலமாக வலம் வந்து முருக பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
சில பக்தர்கள் அலகு குத்தி காவடி சுமந்து காவடியாட்டம் ஆடி வலம் வந்ததை பூர்வீக லண்டன்வாசிகள் ஆர்வத்தோடு பார்த்து ரசித்தனர்.













Click it and Unblock the Notifications