திருப்பதி-கிருஷ்ணதேவராயர் தந்த நகைகள் எங்கே?

Subscribe to Oneindia Tamil

Tirupathi Balaji
திருப்பதி விஜய நகர மன்னரான கிருஷ்ணராய தேவராயர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அன்பளிப்பாக வழங்கிய தங்க, வைர நகைகளை காணவில்லை என்று புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலுக்கு மன்னர் கிருஷ்ண தேவராயர் ஏராளமான தங்க, வைர ஆபரணங்களை காணிக்கையாக வழங்கி இருந்தார். அவற்றை கடந்த 1513ம் ஆண்டு முதல் 1521ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் வழங்கினார்.
இவை அனைத்தும் திருப்பதி தேவஸ்தான ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் கிருஷ்ண தேவராயரின் 500ம் ஆண்டு பட்டாபிஷேக விழாவை சிறப்பான முறையில் கொண்டாட முடிவு செய்தது. பட்டாபிஷேக விழாவையொட்டி ஏழுமலையானுக்கு கிருஷ்ண தேவராயர் வழங்கிய வைர, தங்க நகைகளை அணிவித்து பூஜை நடத்த திட்டமிட்டனர்.

இதையடுத்து திருப்பதி தேவஸ்தான கருவூல அதிகாரியிடம் கிருஷ்ண தேவராயர் வழங்கிய நகைகளை கொண்டு வருமாறு கூறப்பட்டது.

ஆனால், அந்த நகைகள் அனைத்தும் 40 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கப்பட்டு விட்டதாக கருவூல அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் தேவஸ்தான அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டளது.

இந் நிலையில் முதலில் நகைகள் மாயமானதாகவும் பின்னர் கரூவூல அதிகாரி சொன்னதைப் போல உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டுவிட்டதாகவும் சொன்ன தேவஸ்தானம் இப்போது அதை மறுத்து புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கிருஷ்ணதேவராயர் திருப்பதி கோவிலுக்கு நகைகள் தந்ததற்கு ஆதாரமே இல்லை என்று கூறியுள்ளது. சில கல்வெட்டுக்களில் தான் நகைகள் தரப்பட்டதாக தகவல் உள்ளதே தவிர, அதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளது.

இது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+