நெய் சப்ளை அதிகரிப்பு – இனி திருப்பதியில் கேட்கும் லட்டுகள் கிடைக்கும்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நெய் பற்றாக்குறை தீர்ந்துள்ளதால் இனி எவ்வளவு லட்டுகளையும் பக்தர்கள் வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டள்ளது.
உலகப் புகழ் பெற்றது திருப்பதி லட்டு. ஆனால் நெய் பற்றாக்குறை ஏற்பட்டதால் லட்டு உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. ரேஷன் வைக்கும் அளவுக்கு நிலைமை போனது.
இந்த நிலையில் தற்போது நெய் பற்றாக்குறைக்குத் தீர்வு கண்டுள்ளது திருப்பதி கோவில் நிர்வாகம். கர்நாடகத்தைச் சேர்ந்த அரசு பால் உற்பத்தி நிறுவனம் திருப்பதிக்கு தேவையான நெய்யை சப்ளை செய்ய ஒத்துக் கொண்டுள்ளது. அதன்படி தினசரி 8 டன் நெய் சப்ளை செய்யப்படுகிறது. இதன் மூலம் தினசரி 3 முதல் 5 லட்சம் லட்டுக்களை தயாரிக்க முடியுமாம்.
இதைத் தொடர்ந்து இனி பக்தர்கள் விரும்புகிற அளவுக்கு லட்டுக்களை வாங்கிச் செல்ல்லாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications