திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா தொடக்கம்

திருவையாறில் தியாகராஜரின் சமாதி அருகே அமைக்கப்பட்டுள்ள மேடையில் விழா நடைபெற்றது.
நேற்று மாலை 5 மணிக்கு எஸ்.காசிம், எஸ்.பாபு குழுவினரின் மங்கள இசையுடன் ஆராதனை விழா கோலாகலமாக துவங்கியது.
பின்பு, புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தஞ்சை கலெக்டர் சண்முகம், தியாக பிரம்ம மகோத்சவ சபை தலைவர் ஜி.ரங்கசாமி மூப்பனார் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இதனையடுத்து, நள்ளிரவு வரை இசை கலைஞர்கள் நடத்தும் கச்சேரி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த விழா, ஜனவரி 6 -ந் தேதி வரை தினமும் காலை 8 மணியில் இருந்து நள்ளிரவு வரை இடைவிடாமல் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை 5 ந்தேதி காலை நடைபெறுகின்றது. இதில் ஏராளமான இசை கலைஞர்கள் ஒரே நேரத்தில் பாட்டு பாடி தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.












Click it and Unblock the Notifications