2010ல் மிகக் குறைவாக 42 பேருக்கு போலியோ பாதிப்பு: விரைவில் போலியோ இல்லா இந்தியா
Subscribe to Oneindia Tamil

போலியோ இல்லாத நாடு என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மேற்கு வங்காளத்தில் உள்ள ஹவுரா மாவட்டத்தில் ஒருவருக்கு போலியோ தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே தற்போது வரை ஒரே ஒரு வர் மட்டும் தான் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அன்மையில் ஹவுரா, கொல்கத்தா, முர்ஷிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
மேற்கு வங்கத்தில் போலியோ தாக்கம் அதிகமுள்ள பதுகிளில் இருந்து அதை முற்றிலுமாக அகற்ற பல போலியோ முகாம்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
மேற்கு வங்கத்தில் குழந்தைகளுக்கு போலியோவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல முறை போலியோ மருந்து கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications