யானை இறந்ததைத் தெரிவிக்காத 3 வனப்பணியாளர்கள் சஸ்பெண்ட்: வன அதிகாரி அதிரடி
ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானை இறந்தது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத மூன்று வனத்துறை பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது கொத்தமங்கலம் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் உத்திரபள்ளம் என்ற இடத்தில் ஐந்து வயது மதிக்கதக்க ஒரு பெண் யானை ஒன்று நோய்வாய்பட்டு இறந்து கிடந்தது.
இந்த யானை இறந்தது குறித்து தகவல் அறிந்த ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் அருண், சத்தியமங்கலம் மாவட்ட வன அதிகாரி சதீஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த யானையை பார்த்து ஆய்வு நடத்தினர்.
மேலும், அழுகிய நிலையில் இருந்த யானைக்கு அதே இடத்தில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
இதையடுத்து யானை இறந்தது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காத வனப் பணியாளர்கள் குணசேகரன், புகழேந்தி, கண்ணையன் ஆகிய 3 பேரையும் மாவட்ட வன அதிகாரி சதீஷ் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications