ஒரே மாதத்தில் திருச்செந்தூர் கோயில் உண்டியலில் ரூ.1.50 கோடி வசூல்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் உண்டியல் மூலம் ஒரே மாத்தில் ரூ.1.50 கோடி கிடைத்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் உண்டியல் நேற்று முன்தினம் கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.
இதில் ரூ.1 கோடியே 59 ஆயிரத்து 303 வசூலாகியுள்ளது. மேலும் பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் தங்கம் ஒரு கிலோ 6 கிராமும், வெள்ளி 10 கிலோ 372 கிராமும் இருந்தது. இது 28-12-2010 முதல் 27-1-2011 வரையிலான ஒருமாத உண்டியல் வசூலாகும்.
கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.72 லட்சம் மட்டுமே வசூலாகி இருந்தது. தற்போது அதை விட இருமடங்கு காணிக்கை வசூலாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புத்தாண்டு, பொங்கல், தைபூசத் திருவிழா, அடுத்தடுத்து வந்த பண்டிகை நாட்களில் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதே இதற்கு காரணம்.












Click it and Unblock the Notifications