துபாயில் ஈமான் அமைப்பு நடத்தும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

இது குறித்து ஈமான் பொதுச் செயலாளர் குற்றாலம் ஏ. லியாக்கத் அலி கூறியதாவது,
துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. முதலில் சிறிய அளவில் ஆரம்பித்து இன்று சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தினமும் தமிழக நோன்புக் கஞ்சியை வழங்கி வருகிறது. நோன்புக் கஞ்சியுடன் சமோசா, ஆரஞ்சு, குளிர் பானம், தண்ணீர், பேரீச்சம் பழம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது என்றார்.
இத்தகைய மாபெரும் நிகழ்வு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன், கல்விக் குழுத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் ஆகியோரது வழிகாட்டுதலுடன் பொதுச் செயலாளர் ஏ.லியாக்கத் அலி, மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, விழாக் குழு செயலாளர் யஹ்யா முஹயித்தீன், ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், கல்விக் குழு செயலாளர் ஹிதாயத்துல்லா, அலுவலக மேலாளர் ஏ. ஹமீது யாசின், படேஷா பஷீர், இல்யாஸ், ஷர்புதீன், ஷாகுல் ஹமீது, உஸ்மான், ஜமால் முஹம்மது உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் புரவலர்கள் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவையைச் சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வி. நந்தகுமார் அவர்கள் கூறுகையலி், இஃப்தார் நிகழ்வில் ஒரு பூகோள கிராமத்தைப் பார்ப்பது போன்ற ஒருபிரமிப்பினை ஏற்படுத்துகிறது. இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி. இந்தியா அல்லாத வேறொரு நாட்டில் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் ஈமான் அமைப்பினரின் சேவையினைப் பாராட்டுகிறேன் என்றார்.
இப்பணியில் ஈடுபட விரும்புவோர் 050 4674399 / 050 5196433 எனும் அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications