அகஸ்தியர் மலைக்கு செல்ல ரூ.200 கட்டணம்: கேரள வனத்துறை
நெல்லை: அகஸ்தியர் மலை புனித பயணத்திற்கான அனுமதி டிக்கெட்டுகள் நாளை முதல் வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு ரூ. 200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லையில் உள்ள வனப்பகுதியி்ல் அகஸ்தியர் மலை உள்ளது. பண்டைய காலத்தில் அகஸ்திய முனிவர் இங்கு தவம் செய்ததாக கூறப்படுகிறது. இங்கு அகஸ்தியருக்கு சிலை உள்ளது. ஆண்டுதோறும் தை மாதத்தி்ல் இந்த மலைக்கு மக்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.
கடந்த சில வருடங்களுக்கு முன் அகஸ்தியர் மலைக்கு பக்தர்கள் செல்வதற்கு கேரள வனத்துறையினர் திடீரென தடை விதித்தனர். திருவனந்தபுரத்தில் உள்ள வன அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி, அனுமதி சீட்டு வாங்கிய பிறகுதான் புனிதப் பயணம் மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான புனிதப் பயணம் வரும் 14-ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் இந்த பயணத்திற்கான அனுமதி சீட்டு வரும் 10,11,12 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் பிடிபி நகரில் உள்ள வன அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு கட்டணம் ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications