சபரிமலை-மகர விளக்கு காலம் இன்று நிறைவு: வசூல் ரூ. 140 கோடி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த 14-ம் தேதி மகர விளக்கு பூஜை, மகர ஜோதி தரிசனம் நடந்தது. இந்த ஆண்டு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேவசம்போர்டுக்கு வருவாய் ரூ.140 கோடி கிடைத்துள்ளது.
இந்நிலையில் இவ்வருட மகர விளக்கு காலம் இன்றுடன் நிறைவடைகிறது. நேற்று பகல் 11.30 மணிக்கு நெய் அபிஷேகம் நிறைவடைந்தது. பின்னர் ஐயப்பனுக்கு சிறப்பு காலபிஷேகம் நடந்தது. இன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். நாளை காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அப்போது பக்தர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது.
பந்தளம் மன்னர் பிரதிநிதி ராகவர்ம ராஜா மட்டும் தரிசனம் செய்வார். காலை 7 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி மாதம் 12-ம் தேதி கோயில் நடை திறக்கப்படும். வழக்கமாக மகர விளக்கு பூஜை முடிந்தவுடன் சபரி்மலைக்கு பக்தர்கள் வருகை குறைந்துவிடும். ஆனால் இந்தாண்டு மகர விளக்கு பூஜை முடிந்த பிறகும் பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications