வடகிழக்கு பருவமழை தீவிரம்- குற்றால அருவிகளில் கொண்டாட்டம்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 4 நாட்கள் தாமதமாக கடந்த 24ம் தேதி தொடங்கியது. இதையடுத்து வங்கக்கடலில், ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வழக்கமாக தென்மேற்கு பருவமழை பெய்யும் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். குற்றால சீசன் என்று கருதப்படும் இந்த 3 மாதங்களும் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். அதன் பிறகு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் குற்றாலம் வெறிச்சோடி காணப்படும்.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதன் விளைவாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று தீபாவளி என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications