Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சங்கரன்கோவிலில் ஆடிதபசு- கோவில் நிர்வாகம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி தபசு காட்சி மிகவும் பிரசித்த பெற்றது.

இதனை காண தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவில் வருவார்கள். சங்கரன்கோவில் ஆடி தபசு காட்சி குறித்து அனைத்து காலண்டரிகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த ஆண்டு ஆடி தபசு காட்சி ஆகஸ்ட் மாதம் 12 தேதி நடக்க உள்ளதாக காலண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் ஆடி தபசு காட்சி 11ம் தேதியே நடக்கிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் கூறியிருப்பதாவது,

சிவன் வேறு, விஷ்ணு வேறு என்ற இருவேறு கருத்துகள் நிலவிய காலத்தில் சைவமும், வைணவமும் ஒன்று என்ற உண்ணத தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவதற்காக அன்னை கோமதி ஆடி மாதம் இறைவனை நோக்கி தவமிருந்தாள் எனவும் அவருடைய தவதுக்கு இணங்கி சுவாமி சங்கரநாராயணராக உத்திராட நட்சத்திரத்தில் பவுணர்மி நாளில் காட்சியளித்தார் என்பது தல வரலாறு.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திராட நட்சத்திரத்தில் பவுர்ணமி நாளில் சங்கரநாராயணராக அம்பாளுக்கு காட்சி கொடுக்கம் ஆடிதபசு காட்சி நடைபெறறு வந்தது. இதுவரை பவுர்ணமியும், உத்திரட நட்சத்திரமும் சேர்ந்தே வந்தது. ஆனால் இந்தாண்டு உத்திரட நட்சத்திரம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதியும் பவுர்ணமி ஆகஸ்ட் 12ம் தேதியும் வருகிறது.

ஆடிதபசு காட்சி உத்திராட நட்சத்திரத்தில் நடைபெற வேண்டும் என்பது ஐதீகம். ஆகவே ஆடிதபசு காட்சி ஆகஸ்ட் 11ம தேதி நடைபெறுகிறது. இவ்வாறு கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+