தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு உற்சாகக் கொண்டாட்டம்
திருச்சி: இன்று ஆடிப்பெருக்கு. இதையொட்டி தமிழகம் முழுவதும் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடி கொண்டாடினர்.
ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப் பெருக்கு தினமாக தமிழகத்தில் கொண்டாடப்படும். மங்கல நாளான இன்று புதுமணத் தம்பதிகள் தம்பதி சமேதராக புனித நீராடி தாலி மாற்றிக் கொள்வது வழக்கம். அதேபோல திருமணமாகாத பெண்கள், நல்ல கணவன் கிடைக்க வேண்டி கடவுளை வணங்குவதும் இந்த நாளில்தான்.
அந்த வகையில் இன்று ஆடிப் பெருக்கு தினம் தமிழகத்தில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் ஆயிரக்ககணக்கானோர் கூடி அம்மா மண்டபம் பகுதியில் புனித நீராடினர்.
பெரும் திரளான இளம் தம்பதிகள் தங்களது தாலிக் கயிற்றை மாற்றி, வணங்கினர். அதேபோல திருமணமாகாத இளம் பெண்கள், நல்ல கணவர் கிடைக்க வேண்டி வணங்கி புனித நீராடினர்.
பக்தர்கள் கூட்டம் பெரும் திரளாக இருந்ததாலும், காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதாலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேபோல திருவையாறு, வேலூர் பரமத்தி, கும்பகோணம், பவானி கூடுதுறை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆடிப் பெருக்கு தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
கரூரில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகம்:
கரூர் அருகே உள்ள வாங்கல் மற்றும் நெரூர் பகுதியில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டு காவிரி நதியில் புனித நீராடினார்கள்.
பின்பு, பெண்கள் வெற்றிப்பாக்கு, பழம், மஞ்சள் கயிறு வைத்து தங்களது குடும்பத்துன் காவிரி அன்னையை வழிபட்டு கழுத்தில் புதிய தாலிக் கயிற்றை மாற்றிக் கொண்டு சுமங்கலி பூசை செய்தனர்.
மேலும் , காவிரி ஆற்றில் சர்க்கரை பொங்கல், புளியோதரை போன்றவற்றை வைத்து வழிபட்டு அவற்றை உறவினர்களும், நண்பர்களும் கொடுத்து மகிழ்ந்தனர்.
கரூரில், அருள்மிகு பசுபதீஸ்வரர் கோயில், கல்யாணவெங்கட் ரணம சுவாமி, நெரூர் சதாசிவ பிரமேந்திராள் கோயில், அக்னீஸ்வர் கோயில், கருவூரார் சன்னதி போன்ற பல்வேறு கோயில்களில் காலை முதலே மக்கள் வரிசையாக நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அதே போல திருச்சியில் அருள்மிகு திருவரங்கம், சயமபுரம் மாரியம்மன் கோயில், உச்சிப்புள்ளையார் கோயில், வெங்காளி அம்மன் கோயில் என பல கோயில்களில் அதிகாலை முதல் மக்கள் திரண்டு சென்று சாமி தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர்.
ஆடிப்பட்டம் தேடி விதை' என்று ஒரு பழமொழி உண்டு. அதனால் ஆடி 18 ம் பெருக்கு அன்று விதை விதைத்தால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது தமிழக விவசாயிகளின் நம்பிக்கையாகும்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications