நாளை திருப்பூரில் 8வது புத்தகக் கண்காட்சி : கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடக்கிறது
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் நாளை (28 ம் தேதி) புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.
திருப்பூரில் நாளை (28 ம் தேதி) மின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து 8 வது புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றன.
இந்த புத்தகக் கண்காட்சி திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் காலை 11 மணி முதல் இரவு 9.30 வரை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஏராளமான பதிப்பகங்கள் பங்குபெறும் இதில் ஏராளமான சுவாரஸ்யமான புத்தகங்கள் வைக்கப்படுகின்றன.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக தொடர்ந்து 8 ஆண்டுகளாக திருப்பூரில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications