சென்னை எஸ்ஐஇடி கல்லூரியில் லோக்பால் மசோதா விவாத நிகழ்ச்சி
சென்னை: தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில், லோக்பால் மசோதா குறித்து விவாத நிகழ்ச்சி நாளை மாலை நடக்க உள்ளது.
சென்னை தேனாம்பேட்டையி்ல் தென் இந்திய கல்வி அறக்கட்டளை (எஸ்ஐஇடி) கல்வி நிறுவனம் உள்ளது. எஸ்ஐஇடி அறக்கட்டளை மற்றும் முஸ்லீம்கள் இடையே இயல்பான எண்ண ஊக்குவிப்பதற்கான கருத்துக்களம் (பார்மோடம்) ஆகியவை இணைந்து லோக்பால் மசோதா குறித்து விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
எஸ்ஐஇடி கல்லூரி நிர்வாக கட்டிடத்தில் உள்ள அகாடமி ஹாலில் மாலை 5.45 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்க உள்ளது. நிகழ்ச்சியில் அகில இந்திய மதசார்ப்பற்ற கருத்துகளம் எழுத்தாளர் பேராசிரியர் ராம் புனியானி, எஸ்ஐஇடி தலைவர் மூசா ராசா, முன்னாள் மத்திய வருவாய் செயலாளர் சிவராமன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்.எல்.ராஜாய், பார்மோடம் பொது செயலர் பாய்சர் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றுவர்.
மேலும் விவரங்களுக்கு 77082 61220, 9444 338822 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications