அண்ணா நினைவு நாள்-திமுக அமைதிப் பேரணி-கருணாநிதி, ஜெ. அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

Arignar Anna
சென்னை: பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி திமுக சார்பில் இன்று அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில், முதல்வர் கருணாநிதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இன்று அண்ணா நினைவு நாள். இதையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பேரணியை திருவல்லிக்கேணியில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மேயர் மா.சுப்ரமணியன், அமைச்சர்கள், திமுக தலைவர்கள், தொண்டர்கள் நடந்தே அண்ணா சமாதியை சென்றடைந்தனர்.

அங்கு முதல்வர் கருணாநிதி மலர் தூவி அண்ணாவை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் அன்பழகன், மு.க.ஸ்டாலின் உள்ளிடடோரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் முதல்வர் கருணாநிதி திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அறிவாலயம் புறப்பட்டுச் சென்றார்.

ஜெயலலிதா அஞ்சலி:

இதேபோல அண்ணா நினைவிடத்திற்கு கட்சியினருடன் வந்த ஜெயலலிதா அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் மாநில நிர்வாகிகள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மாநிலம் முழுவதும் அண்ணா நினைவு நாளை திமுகவினர் கடைப்பிடித்தனர். காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திலும் அவரது நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+