For Daily Alerts
Just In
சந்தித்த வேளையில்...
ஒரு வசந்த கால
தொடக்கத்தில்தான்
நாம் முதன்முதலாக
சந்தித்தோம்..
பதின்பருவத் தொடக்கம்
என்பது எல்லோருக்குமே
வசந்தகாலம்தான்….
பள்ளிப்பருவத்தில்
பட்டாம்பூச்சிகளாய்
சுற்றித்திரிந்த நாம்
காதல் வயப்பட்டவுடன்
கூட்டுப்புழுக்களாய் ஆனோம்…
அந்த விநோத வாழ்க்கை
இருவருக்குமே பிடித்துப்போனது….
மகிழ்ச்சி என்ற வார்த்தையே
காதல் வந்த பின்புதான்
நமக்கு புரிந்தது…
வாழ்க்கைப் பயணத்தில்
கரம் பற்றி கடைசிவரை
இணைந்து நடப்போமென
இருவரும் எடுத்த முடிவில்
இயற்கை விளையாடியது…
வெவ்வேறு பாதைகள்
வெவ்வேறு பயணங்கள்
பாதியிலேயே
நம் பந்தம் பிரியுமென்று
கனவிலும் நினைக்கவில்லை…
வசந்தகாலம் என்றிருந்தால்
இலையுதிர்காலமும்
வரத்தானே செய்யும்…
நாம் பிரிந்த தருணமும்
ஒரு இலையுதிர்காலம்தான்…
நமக்காக
இயற்கையே கண்ணீர் வடித்தது….
பசுமையை உதிர்த்துவிட்டு
மரங்கள் துக்கம் அனுஷ்டித்தன.
Comments
English summary
This poem is telling about sad love story. A Sad Love story telling us not to be afraid of expressing our Feelings abed try to understand others feeling and their problems.
Story first published: Wednesday, April 27, 2011, 11:15 [IST]