வளைகுடா நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பார்கள். மாத இறுதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். வளைகுடா நாடுகளில் இன்று ஈகைப் பெருநாளான ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் வழங்கி பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
துபாய் தேராவிலுள்ள ஈத்கானா மைதானத்தில் காலை 6. 20 மணிக்கு ஈத் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இந்த பெருநாள் தொழுகையில் கடல் அலைகளா? மக்கள் தலைகளா? எனும் அளவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
ஏழை, பணக்காரன், நாடு, மொழி பேதமின்றி மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து தொழுதனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications