சட்டென்று மறைந்து போனாய்…!
Subscribe to Oneindia Tamil

அந்திப்பொழுதில்
ஒருநாள்
மின்னலைப்போல
என் எதிரில் வந்தாய்….
கண்டவுடன் காதலாகி
என் இதயத்தில்
நீ நுழைந்தாய்….
கோவில்
குளக்கரை
பேருந்து நிறுத்தம் என
எதிர்பாரத சந்திப்புகளில்
நம் எண்ணங்களை
பார்வையால் பரிமாறினோம்…
நீ எதிரில் இருந்தபோது
காதலை சொல்லவில்லை…
நான் சொல்ல நினைத்த போது
நீ இல்லை….
உன் நினைவுகளை மட்டுமே
சுமந்து கொண்டிருக்கும்
என்முன்
மீண்டும் வருவாயா?












Click it and Unblock the Notifications