நெஞ்சில் நிறைந்த நினைவுகள்...
Subscribe to Oneindia Tamil

அதிகாலையில்
அலாரம் வைத்து
எழுவது முதல்
அலுவலகம் சென்று
திரும்பும் வரை….
அலுப்பூட்டும்
நகரவாழ்க்கைக்கு நடுவே
அவ்வப்போது
எட்டிப்பார்க்கும்
கிராமத்து நினைவுகள்…
திண்ணையில் விளையாடிய
பல்லாங்குழி…
அக்காவுடன் ஆடிய
கிளித்தட்டு…
கண்மாயில்
வைத்த நீச்சல் பந்தயம்
என நெஞ்சம் முழுக்க
நிறைந்து கிடக்கும்
பருவகால நினைவுகள்…
நகரவாழ்க்கையில்
ருசிக்காக
அவ்வப்போது
பீட்சாவும், பர்கரும்
விதவிதமாய் சுவைத்தாலும்….
காக்காய் கடி
கடித்து தின்ற
கடலை உருண்டையும்
கமர்கட் மிட்டாயும்
கடைசிவரை
நாவில் இனிக்கும்…












Click it and Unblock the Notifications