அமீரகத்தில் இந்திய சுதந்திர தின உற்சாகக் கொண்டாட்டம்
அபுதாபியில் இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் சுதந்திர தின செய்தியினை வாசித்தார். அமீரக வளர்ச்சிக்கு இந்திய மக்களின் பங்களிப்பினை நினைவு கூர்ந்தார். கடந்த காலங்களை விட உயர்கல்வி கற்றவர்கள் அதிகளவில் தற்பொழுது அமீரகத்துக்கு வரத்துவங்கிவிட்டனர் என்றார்.
துபாயில் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் சுதந்திர தின செய்தியினை வாசித்தார். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் அமீரக பொதுமக்கள் இந்திய கன்சல் அலுவலகத்துடன் பேஸ்புக் மூலம் தொடர்பு கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
www.facebook.com/IndianConsulate.dubai
மேலும் ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ஃபுஜைரா, கோர் பக்கான், அல் அய்ன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்திய சுதந்திர தினம் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் இந்திய வர்த்தகர்கள், பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.













Click it and Unblock the Notifications