அருவிக் கரையில் அரும்பிய காதல்
Subscribe to Oneindia Tamil
- மயூரா அகிலன்
உள்ளத்தை ஊடுருவும் காற்று
ஊரெங்கும் சாரல் மழை….
கூப்பிடு தூரத்தில் குற்றாலம்
ஆர்ப்பரித்துக் கொட்டும்
அருவியைப் பார்ப்பதே
அளவில்லாத ஆனந்தம்…
இது போல ஒரு மழை நாளில்தான்
பச்சைப் பாவாடை தாவணியில்
பளிச்சென்று என் கண்ணில் பட்டாய்….
அருவியில் குளிக்க அச்சப் பட்டு
தள்ளி நின்று ரசித்தாய்…
அன்று அருவியை ரசித்ததை விட
உன்னைத்தான் அதிகம் ரசித்தேன்…
எங்கிருந்து வந்தாய் நீ ?
கொட்டும் அருவியில் எழும்
தண்ணீர்ப் புகையைப் போல
சட்டென்று மறைந்து போனாய்…
ஒவ்வொரு சீசனிலும்
அருவியில் ஆட்டம் போட
நான் வரும் போதெல்லாம்
என் கண்கள்
உன்னைத் தேடும்
ஆனால்
நீதான் வருவதேயில்லை!












Click it and Unblock the Notifications