பகல் கனவாகிப் போன மாயம்...
Subscribe to Oneindia Tamil

என் நெற்றிப் பொட்டின்
முகவரி நீயாவாய்
என நினைத்தேன்…
ஆனால்
முகவரி இல்லாத
கடிதம் போல
தொலைந்து போனாயடா….
உன் கையால்
சூடிய மலரின் வாசமும்
மறைந்து போனதடா….
ஜன்னல் வழியே
பொழியும் நிலவும்
என்னை சுட்டெரிக்குதடா…..
சொந்தங்கள் சுற்றியிருக்க….
ஒருவருக்கொருவர்
மாலை மாற்றிக் கொள்வது போல்…
எத்தனைமுறை கனவுகள் கண்டோம் ?
எல்லாமே பகல் கனவாய் போனதடா …..












Click it and Unblock the Notifications