Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைதியான மனதிற்கு ஆதாரம்

Subscribe to Oneindia Tamil

Peaceful
'மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்." இது திருமூலர் வாக்கு. மனதில் சஞ்சலம் இல்லாமல் மிகமிக தெளிவான மனத்துடன் இருப்பதுதான் வாழ்க்கை.

வாழ்க்கையின் அர்த்தமே மனஅமைதிதான். மனஅமைதியுடன் செய்யும் எந்த காரியமும் வெற்றி பெறும். எந்த எண்ணங்களும் நிறைவேறும். நம்பிக்கையும், துணிவுமே வெற்றிக்கான வழி.

தன்னம்பிக்கையே வெற்றிக்கு வழி

மனதிற்கும், உயிருக்கும் தொடர்பு உண்டு. உயிருக்கும், இறைவனுக்கும் சம்பந்தம் உண்டு. மனமும், உயிரும் இறைவனால் இயங்குகின்றன. மனம் தெய்வத்தன்மை வாய்ந்தது. தெய்வ நம்பிக்கையோடும், தன்னம்பிக்கையோடும், செய்யும் காரியம் நிச்சயம் நிறைவேறும்.

மனத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ மற்றவர்களுக்கு எந்தவித சங்கடத்தையும், துன்பத்தையும், உண்டாக்கக்கூடாது. மனஅமைதிக்கும், மனவலிமைக்கும் முக்கிய சக்தியாக இருப்பது மனத்தூய்மை. மனத்தூய்மை உடையவர் யாரும் எந்தவித கெட்ட சக்திக்கும் அஞ்சவேண்டிய அவசியம் இல்லை.

எண்ணங்களின் வலிமை

நல்ல எண்ணங்கள்தான் நல்ல காரியங்களைச் செய்யும். எண்ணங்களின் தொகுப்பே ஆசையாகவும், நம்பிக்கையாகவும், மாறுகிறது. நல்ல எண்ணங்கள் நல்ல விதைகள் போன்றது. நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வெறும் உடல் வலிமை மட்டுமே வாழ்க்கை அல்ல. உடல்வலிமை ஓரளவிற்குத்தான் வாழ்க்கைக்கு உதவுகிறது.

மனவலிமையும், மன ஆரோக்கியமும்தான் உண்மையான வாழ்க்கை.
மனஅமைதிக்கும், மனவலிமைக்கும் ஆதார சக்தியாக விளங்குவது மனத்தூய்மையே. வாழ்க்கையின் அர்த்தமே மனவலிமைதான். மனஅமைதிதான். மனதில் சஞ்சலமோ, குழப்பமோ, இல்லாமல் மிகத்தெளிவான மனத்துடன் நடத்துவதுதான் வாழ்க்கை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+