பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஆக.31ல் தேரோட்டம்

Subscribe to Oneindia Tamil

Pillayarpatti
பிள்ளையர்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 31ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தின் பிரபல விநாயகர் கோயில்களில் முதன்மை வகிப்பது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

இந்த கோவிலில் நகரத்தார் என அழைக்கப்படும் சமூகம் கட்டுப்பாட்டில் உள்ளதால், தொடர்ந்து பல்வேறு ஆன்மீக பணிகளை செய்து வருகின்றனர். இதில் சதுர்த்தி விழா மிக பிரபலம். இக்கோவிலில் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் காலை 9.30 மணிக்கு வெள்ளி கேடகத்தில் விநாயகர் வலம் வருவார். பின்பு இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. நேற்று மாலையில் யானை முகம் கொண்ட சூரனை விநாயகர் வதம் செய்யும், கஜமுகாசூரசம் ஹாரம் நடந்தது.

இன்று மாலை 3 மணிக்கு, தேரோட்டத்திற்கான முகூர்த்தக் கால் நடப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் 31ம் தேதி அன்று காலை 9.20 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் கற்பக விநாயகர் எழுந்து அருள்வார். மாலை 4 மணிக்கு, தேரோட்டம் நடக்க உள்ளது. இதற்கு வரும் பக்தர்களுக்கான பல்வேறு வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+