ராஜீவ் காந்தி நினைவு தினம்: இன்று ஸ்ரீபெரும்புதூர் வந்தடையும் ராஜீவ் ஜோதி யாத்திரை
கன்னியாகுமரி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவாக கர்நாடக மாநில தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் பொங்களூரில் இருந்து புறப்பட்ட ராஜீவ் ஜோதி யாத்திரை இன்று ஸ்ரீபெரும்புதூரை அடைகிறது.
கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தற்கொலைப் படையினரால் கொல்லப்பட்டார். நாளை (21-ம் தேதி) அவர் மறைந்து 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவாக ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநில தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் பொங்களூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவ் ஜோதி யாத்திரை நடத்துவது வழக்கம்.
ராஜீவ் காந்தியின் 20-வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு ராஜீவ் ஜோதி யாத்திரை பெங்களூரில் இருந்து கடந்த 15-ம் தேதி தொடங்கியது.
இந்த யாத்திரை மைசூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவாய், ஆலப்புழா, கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரி, நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திருச்சி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், மகாபலிபுரம், சென்னை வழியாக சென்று 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரை அடைகிறது.












Click it and Unblock the Notifications