திருச்செந்தூர் கோவில் ஆவணித் திருவிழா 7-ம் நாள்: ஆறுமுகநயினார் தங்க சப்பரத்தில் வீதியுலா

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் ஆவணி திருவிழாவின் 7-ம் நாளான நேற்று சுவாமி ஆறுமுக நயினார் தங்க சப்பரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்தார்.

அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வரும் 30-ம் தேதி வரை தொடர்ந்து 12 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகின்றனர்.

திருவிழாவின் 7-ம் நாளான நேற்று காலை 5.30 மணிக்கு சுவாமி சண்முக பெருமாள் உருகு சட்டசேவை நடந்தது. 8 மணிக்கு சுவாமி வெட்டிவேர் சட்டசேவை நடந்தது. பின்னர் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடந்ததுய மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்தார்.

இன்று அதிகாலை சுவாமி ஆறுமுகநயினார் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளி சாத்தி எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார்.

அங்கு அபிஷேக, அலங்கார, தீபாரதனை நடந்தது. காலை 10.20க்கு சுவாமி ஆறுமுக நயினார் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலாவந்து இரவில் கோவிலை அடைகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+