சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகள் குறித்து கணக்கெடுப்பு
Subscribe to Oneindia Tamil

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பேரன்கள், பேத்திகளுக்கு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படும் வேலைகளில், 10 சதவீத ஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கு வசதியாக தமிழகத்தில் உள்ள தியாகிகளின் பேரன்கள், பேத்திகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தி விவரத்தை தாக்கல் செய்யுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அனைத்து மாவட்டஆட்சித் தலைவர்களும் இதுதொடர்பான கணக்கெடுப்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
தியாகிகளின் பேரன், பேத்திகள் உரிய சான்றுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications