புதிய நீதிக்கட்சி மாநாட்டில் கருணாநிதிக்கு வ.உ.சி. விருது
Subscribe to Oneindia Tamil
வேலூர்: புதிய நீதிக்கட்சி மாநாட்டில் கருணாநிதிக்கு வ. உ.சி. விருது வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
புதிய நீதிக்கட்சியின் மாநில மாநாடு மார்ச் மாதம் 6-ம் தேதி வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
இந்த தகவலை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டையொட்டி தலைவர் சண்முகம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications