பராம்பரிய கலை நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் வருமா?
நெல்லை: நெல்லை மண்டல கலை பண்பாட்டு துறை மாவட்ட கலை மன்றம் ஆகியவற்றின் சார்பில் பொதிகை தென்றல் கலை விழா நடத்தப்பட்டு வருகிறது.
பாரம்பரிய கலைகளை மக்கள் மறந்து விடக் கூடாது, கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் ஊக்கம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உரிய பயிற்சி அளித்து இவ்விழா மாவட்டம் முழுவதும் நடத்தப்படுகிறது. இடையில் நிதிப்பற்றாக்குறையால் நின்று போன இவ்விழா மீண்டும் நிதி கிடைக்க பெற்றவுடன் புத்துயிர் பெற்றுள்ளது.
கோடை விடுமுறையில் குதூகுலமாக இருக்கவே மாணவ சமுதாயமும், பொதுமக்களும் விரும்புவர். தனியார் நிறுவனங்கள் அதற்கு ஏற்றர்போல் கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகளை நடத்தி கூட்டத்தை சேர்ப்பதோடு, லாபத்தையும் பார்த்து விடுகின்றனர். ஆனால் இந்த கலைவிழாவில் பராம்பரியம் என்ற பெயரில் சில நடைமுறைகளை பின்பற்றுவதால் கூட்டம் சேர்ப்பதற்குள் அதிகாரிகள் படாதபாடு பட வேண்டியுள்ளது.
மங்கள இசை, வில்லு பாட்டு, கரகம், தப்பட்டம், கணியன்கூத்து, மயிலாட்டம், ஓயிலாட்டம், என பல வகை கலை நிகழ்ச்சிகள் இருந்தாலும் வரிசை கிரமமாக நிகழ்ச்சி தொகுப்பது என்பது மிகவும் அவசியமாகும். கூட்டம் சேர்ப்பதற்குரிய கலை நிகழ்ச்சிகளை முதல் வரிசையிலும், இடையிடையே காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ள கலை உள்புகுத்தினால் மட்டுமே விழா சிறக்கும்.
ஆனால் முன்னுக்கு பின் முரணாக நிகழ்வுகள் அமைவதால் விழா முடியும் வரை இருக்கைகள் நிரம்புவதில்லை.
பாளை வஉசி மைதானத்தில் நடந்த விழாவில் கலெக்டர் ஜெயராமன் உள்ளிட்ட ஒரு சிலரே நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர். மற்றப்படி மைதானம் முழுவதும் ஆட்கள் பரவி கிடந்தாலும் விழா இருக்கைக்கு வர யாரும் முன்வரவில்லை.
எனவே பராம்பரிய கலைகளை காப்பாற்றும் அதே வேளையில் பார்வையாளர்களை கவரும் வகையில் விழா நிகழ்வுகள் சிற்சில மாற்றங்களோடு செய்ய வேண்டும். இல்லையேனில் கொண்ட நோக்கம் நிறைவேறாது என்பதை சமூக ஆர்வலர்களின் கருத்து.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications