இன்று ஷார்ஜாவில் புத்தகக் கண்காட்சி
ஷார்ஜா: ஷார்ஜாவில் மணிமேகலை பிரசுரம் புத்தகக் கண்காட்சி இன்று(12ம் தேதி) மாலை 4 மணிக்கு அல் கத்தரி பண்ணை இல்லத்தில் நடைபெற இருக்கிறது என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்துராமன் கதிரேஷன் தெரிவித்தார்.
இப்புத்தகக் கண்காட்சி ஐக்கிய அரபு அமீரக நகரத்தார் கூட்டமைப்பு மற்றும் ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெறுகிறது. இதில் ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டுக் கழக தலைவர் ராமலிங்கம், அஜ்மான் அமீரகத் தமிழர் அமைப்பின் மூர்த்தி, கொழும்பு டயர்ஸ் அதிபர் மணிமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புரவலர் வள்ளியப்பன், ஐக்கிய அரபு அமீரக நகரத்தார் கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், ஆலோசகர் சண்முகம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இது குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் 050 78 79 581 அல்லது 050 862 43 70 எனும் அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications