துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் 'போகலாம் பூங்கா' சிறப்பு நிகழ்ச்சி

அப்போது சங்கத்தின் தலைவி மீனாகுமாரி பத்மநாதன் புதிதாகச் சேர்ந்த உறுப்பினர்களை அறிமுகப்படுத்தியதோடு அனைவரையும் வரவேற்று புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
உறுப்பினர்களின் மிகுந்த மகிழ்ச்சிக்கிடையே விளையாட்டு களைகட்டத் தொடங்கியது. 8 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு லெமன் ஸ்பூன் விளையாட்டும், 9 முதல் 12 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு ஸ்கிப்பிங், சிறுவர்களுக்கு பலூன் ஊதிச் சேர்த்தல் போட்டியும், 12 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகளுக்கும், சிறுவர்களுக்கும் கையில் தண்ணீர் எடுத்து டம்ளரில் சேகரித்தல் போட்டியும், பெண்களுக்குக் கையைக் கட்டிக் கொண்டு முறுக்கு உண்பது, ஆண்களுக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு பானை உடைத்தல் போட்டியும் மற்றும் ஜோடி விளையாட்டாக மனைவியர் கணவன்மார்களின் முடியில் ரப்பர்பேன்ட் கட்டுதல் போட்டியும் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருமதி. டாக்டர் பர்வின் பானு, திரு. ஜாபர் அலி தம்பதினர் அறுசுவை மதிய உணவினை அன்போடு வழங்க உறுப்பினர்கள் மகிழ்ச்சியோடு உண்டு மகிழ்ந்தனர். திரு. கிருஷ்ணன் அவர்கள் குடிநீர் வழங்கினார். உணவிற்குப்பின் உறுப்பினர்கள் அனைவரும் பிங்கோ விளையாடி மகிழ்ந்தனர். திருமதி. சாரதா நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications