நவ. 2ம் தேதி துபாய் தமிழ்ச் சங்க 11வது ஆண்டு விழா
துபாய்: துபாய் தமிழ் சங்கத்தின் 11வது ஆண்டு விழா நவம்பர் 2ம் தேதி மாலை 5 மணிக்கு துபாய் இந்திய பள்ளி ஷேக் ராஷித் அரங்கில் நடைபெற உள்ளது.
துபாய் தமிழ் சங்கத்தின் 11வது ஆண்டு விழா அடுத்த மாதம் 2ம் தேதி மாலை 5 மணிக்கு துபாய் இந்திய பள்ளி ஷேக் ராஷித் அரங்கில் நடைபெற உள்ளதாக நிறுவன புரவலர் ஏ.முஹம்மது தாஹா தெரிவித்துள்ளார்.
இதில் ஆசியாவின் புகழ் பெற்ற நடன குழுவான சிங்கப்பூர் மாயா தியேட்டர் குழுவினரின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த குழுவினர் முதல் முறையாக வளைகுடா பகுதியில் தங்களது கலைத்திறனை வெளிப்படுத்த உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பின்னணி பாடகர்கள் மாலதி, பிரியா, ரவிசங்கர், ஷியாம், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு, தங்களின் இனிய குரலால் பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். பிரபல மிமிக்கிரி கலைஞர்களான ரோபோ சங்கர் மற்றும் அர்விந்த் ஆகியோரின் கலக்கல் காமெடியும் இடம் பெற உள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் இலவச முன் அனுமதி சீட்டு பெற வேண்டும். முன் அனுமதி சீட்டு பெற 050 467 4399 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications