குவைத்தில் ஆரோக்கிய வாழ்விற்கான கருத்தரங்கம்

Subscribe to Oneindia Tamil

Healthy life conference held in Kuwait
குவைத்: குவைத் இந்தியா ஃபிரட்டர்நிட்டி ஃபோரம் (KIFF) ஒரு மாத காலம் நடத்தும் "ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை" விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கடந்த 13ம் தேதி ஜம்மியத்துல் இஸ்லாஹி ரவ்தா ஆடிட்டோரியத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

மாலை 6. 45 மணிக்கு சகோதரர் அப்துல் பாரி அவர்கள் திருமறை குர்ஆன் வசனங்கள் ஓத சகோதரர் சிக்கந்தர் பாட்ஷா அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. சகோதரர் சிக்கந்தர் பாட்ஷா அவர்களே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

பின்னர் கேஐஎப்எப்-ன் தலைவர் அப்துல் சலாம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் இந்நிகழ்ச்சிக்கான முக்கியத்துவத்தையும் தேவையையும் எடுத்துரைத்தார். அதன் பிறகு ஜம்மியத்துல் இஸ்லாஹி தலைவர் டாக்டர். சுலைமான் ஷெட்தி அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள். இஸ்லாத்தில் உள்ள உணவு முறைகளை பற்றி விரிவாக கூறிய அவர், இதற்கு ஏற்பாடு செய்த கேஐஎப்எப்-க்கு பாராட்டுக்களை தெரவித்தார்.

அதன் பிறகு "இஸ்லாமும் ஆரோக்கியமும்" என்ற தலைப்பில் டாக்டர். அப்துல் ரகுமான் (ஜஹ்ரா அரசு மருத்துவமனை) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். "நீங்கள் அல்லாஹ்வை நினைவு கொண்டால் உங்களுடைய மனது எந்தவித குழப்பமும் இன்றி சாந்தமாக இருக்கும், அது உங்களுடைய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதை மனதில் உறுதியாக ஏற்றுக்கொண்டு நபிமார்களும்,ஷஹாபாக்களும் தங்களுடைய வாழ்க்கையில் ஆரோக்கியத்திற்கு அளித்த முக்கியத்துவத்தை பற்றி விரிவாகக்கூறினார். மேலும் அன்றாட வாழ்க்கையில் நாம் உட்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும், அதன் நன்மை தீமைகள் பற்றியும் அழகுற எடுத்துரைத்தார்.

அதைத் தொடர்ந்து "இதயநோய்கள்" என்ற தலைப்பில் டாக்டர். தாமஸ் ஐசக் (அல்-ஷபா மருத்துவமனை) அவர்கள் உரையாற்றினார். இதயம் எவ்வாறெல்லாம் நம்முடைய நடவடிக்கையின் மூலம் பாதிக்கப்படுகின்றது, அதை எப்படியெல்லாம் நம்மால் எதிர்கொள்ள முடியும் என்று விளக்கினார்.

மேலும் திரு.ஹஷன் யூசுப் (தலைவர்,கர்நாடக முஸ்லிம் வெல்பேர் அசோசியேசன்), திரு.பஷீர் (தலைவர், கேகேஎம்ஏ(டி.கே) விங்) ஆகியோர் இந்நிகழ்ச்சி குறித்த தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மக்கள் அன்றாட வாழ்க்கையில் பேண வேண்டிய உடற்பயிர்ச்சிகளை (ஆசனங்களை) கேஐஎப்எப்-ன் தன்னார்வ தொண்டர்கள் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.

இறுதியாக சகோதரர். சிராஜ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கேஐஎப்எப்-ன் தன்னார்வ தொண்டர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+