23ல் துபாய் வாழ் இளையான்குடி ஜமாஅத் சங்க உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
துபாய்: துபாய் வாழ் இளையான்குடி ஜமாஅத் சங்க உறுப்பினர்களின் சந்திப்பு நிகழ்ச்சி வரும் 23ம் தேதி காலை 9 மணி முதல் முஷ்ரிப் பூங்காவில் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சல்லை அப்துல் காதர் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கு ரப்பர் காசிம் ஏ.ஏ. நூருல் அமீன் தலைமை வகிக்கிறார். நெய்னாப்பிள்ளை ஃபரீத் வரவேற்புரை நிகழ்த்துகிறார். அம்பலம் பெரோஸ்கான் மற்றும் கச்சியார் அன்சர் அலி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
'பெருமானாரின் பண்புகள்' எனும் தலைப்பில் கோம்பை பெண்கள் நிஸ்வானின் மௌலவி மீரான்கனி பிர்தௌஸி மற்றும் தஞ்சை ஜலாலுதீன் ஷேக் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்த இருக்கின்றனர்.
இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சியை வாவணன் அஹமது கபீர் நடத்துகிறார். சாலையூர் அப்துல் காதர் நன்றியுரையாற்றுகிறார். நிகழ்ச்சியை நெல்லுக்குரிச்சான் முஹம்மது நாசர் தொகுத்து வழங்குகிறார்.
ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. இந்நிகழ்ச்சியில் இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியினைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 050 144 5422 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications